Posts

நடுநிசியில் அந்த ஆண்களுக்கு அங்கே என்ன வேலை?

காங்கிரசின் 70 ஆண்டுகால ஆட்சி இந்தியாவை நாசமாக்கிவிட்டது, அனைத்தையும் சுத்தம் செய்யவேண்டிய பெரிய பணி தங்கள் தலையில் விழுந்திருப்பதாக தூய்மைக்காவலர்கள் அவ்வப்போது அலட்டலாகச் சொல்லிக்கொள்வார்கள். இவர்களின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை  தூய்மைதேசம் பலமுறை பார்த்திருக்கிறது. இப்போதும் பார்க்கிறது. சமீபத்திய சாட்சியம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ள ஒரு குரூர சம்பவம். அந்தக் குரூரத்தை எதிர்கொண்டவர் மாநில அரசில் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள். அந்த அதிகாரியின் பெயர் வரிந்தர்சிங் குண்டு. அவரது மகள் வருணிகா. தலைநகர் தில்லிக்கு அருகே உள்ள சண்டிகரில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான வருணிகாவை இரண்டுபேர் சுற்றிவளைத்தனர். 25 நிமிடம் அந்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுத்தி கடத்திச் செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் இரவுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்ததால் வருணிகா உயிர் பிழைத்தார். இல்லையென்றால் நிர்பயா கதி ஏற்பட்டிருக்கும்.இந்தப் பொறுக்கித்தனமான செயலில் ஈடுபட்ட இரண்டு வாலிப